டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு பிப்.19ல் சீமான் நேரில் ஆஜராக வேண்டும்: திருச்சி நீதிமன்றம் உத்தரவு

2 weeks ago 2

திருச்சி: திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு சம்பந்தமாக சீமான் வரும் பிப்.19ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என திருச்சி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. திருச்சி டிஐஜி வருண்குமார், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்து இருந்தார். இதுகுறித்து ஜன.7ம் தேதி வருண்குமார் தரப்பு சாட்சிகள் இரண்டு பேர் கோர்ட்டில் ஆஜராகி தங்கள் தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று நடந்த வழக்கு விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் கணேஷ் நகரை சேர்ந்த சுயதொழில் செய்து வரும் மணிகண்டன் (36) ஆஜராகி, வருண்குமார் தரப்பின் மேலும் ஒரு சாட்சியாக சாட்சியம் அளித்தார். இந்த வழக்கின் புகார்தாரர் தரப்பிலான விசாரணைகள் முடிந்த நிலையில், கோர்ட் எண்.4 மாஜிஸ்திரேட் (பொ) பாலாஜி, வரும் பிப்.19ம் தேதி, சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் சீமான் தரப்பில் சீமானே நேரில் ஆஜராக வேண்டும். அவர் சார்பில் வக்கீல் ஆஜராக கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு பிப்.19ல் சீமான் நேரில் ஆஜராக வேண்டும்: திருச்சி நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article