டிஐஜி தொடர்ந்த அவதூறு வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்

1 week ago 2

திருச்சி: டிஐஜி தொடர்ந்த அவதூறு வழக்​கில், திருச்சி நீதி​மன்​றத்​தில் நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் நேற்று ஆஜரா​னார். திருச்சி ஜூடீசி​யல் மாஜிஸ்​திரேட் நீதி​மன்​றத்​தில் (எண்​.4) திருச்சி சரக டிஐஜி வருண்​கு​மார் தொடர்ந்த அவதூறு வழக்​கில் சீமான் ஆஜரா​காமல் இருந்​தார். நேற்று முன்​தினம் நடை​பெற்றவழக்கு விசா​ரணை​யின்​போதும் சீமான் ஆஜரா​காத​தால், ஏப்​.8-ம் தேதி நீதி​மன்​றத்​தில் கட்​டா​யம் ஆஜராக வேண்​டும் என்று நீதிபதி விஜயா உத்​தர​விட்​டார்.

அதன்​படி, திருச்சி ஜே.எம். 4 நீதி​மன்​றத்​தில் நேற்று சீமான் ஆஜரா​னார். அப்​போது, நீதிபதி உத்​தர​வின்​பேரில், டிஐஜி வருண்​கு​மார் தரப்​பில் தாக்​கல் செய்த வழக்கு குறித்த ஆவண நகல்​கள் சீமான் தரப்​புக்கு வழங்​கப்​பட்​டன. தொடர்ந்​து, ஏப். 29-ம் தேதிக்கு விசா​ரணையை தள்​ளி​வைத்து நீதிபதி உத்​தர​விட்​டார்.

Read Entire Article