டிஎன்பிஎல் கிரிக்கெட்: நெல்லையை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி

4 hours ago 2

நெல்லை,

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நெல்லையில் நடைபெற்று வருகிறது. இதன் 24-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடின.

இந்த ஆட்டத்தில் டாஸ் டாஸ் வென்ற நெல்லை அணி பேட்டிங் தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கிய கேப்டன் அருண் கார்த்திக் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். நெல்லை அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தும், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற தவறினர்.

கடைசி கட்டத்தில் ஹரிஷ்(42), சோனு யாதவ்(39) அதிரடியால் நெல்லை அணி நல்ல ஸ்கோரை எட்டியது. இறுதியில் நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. திண்டுக்கல் தரப்பில் அஸ்வின், பெரியசாமி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி விளையாடியது.

தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ரன்னிலும், சிவம் சிங் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பாபா இந்திரஜித், மான் பாப்னா, விமல் குமர், ஹன்னி சைனி ஆகியோர் நிதானமாக ஆடி அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தனர். இருப்பினும் நெல்லை அணியின் பந்து வீச்சில் 4 பேரும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

அதையடுத்து களமிறங்கிய தினேஷ், கார்த்திக் சரண் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் திண்டுக்கல் அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியின் சார்பில் விமல் குமார் 48 ரன்களும், மான் பாப்னா 38 ரன்களும், ஹன்னி சைனி 37 ரன்களும் எடுத்தனர். நெல்லை அணி சார்பில் ராக்கி பாஸ்கர் 2 விக்கெட்டும், சோனு யாதவ், இம்மானுவேல் செரியன், அஜய் கிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Read Entire Article