டி.என்.பி.எல்.: மதுரைக்கு எதிராக டாஸ் வென்ற திருப்பூர் பந்துவீச்சு தேர்வு

5 hours ago 2

நெல்லை,

9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றியை ருசித்த 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மட்டுமே 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்து இருக்கிறது. எஞ்சிய 3 இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.

இதன் முதல் இரண்டு கட்ட லீக் ஆட்டங்கள் கோவை மற்றும் சேலத்தில் நடந்தது. இதைத்தொடர்ந்து 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி மாலை 3.15 மணிக்கு நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இதனையடுத்து இதே மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு தொடங்கும் 2-வது ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருப்பூர் அணியின் கேப்டன் சாய் கிஷோர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி மதுரை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Read Entire Article