சென்னை: டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், திடீரென உச்ச நீதிமன்றத்தை நாடியது ஏன் என்றும், அதை முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் இந்த வழக்கை நாங்கள் விசாரணைக்கு ஏற்று இருக்க மாட்டோம் என்றும், இது எங்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6 முதல் 8-ம் தேதி வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது.