ஜூலை 3ம்தேதி திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் கழிவு செய்த வாகனங்கள் ஏலம்

5 hours ago 1

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் 15 வருடம் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 8 நான்கு சக்கர வாகனம் மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 10 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 3.7.2025 அன்று காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

ஏலம் எடுக்க விரும்புவோர் 2.7.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றே ரூ.2,000 முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.

பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (இரு சக்கர வாகனத்திற்கு 12% மற்றும் நான்கு சக்கரவாகனத்திற்கு 18%) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் வாகனங்கள் இயங்கும் நிலையில் இல்லை scrap பயன்பாட்டிற்கு மட்டுமே ஏலம் விடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article