ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் சார்பில் ‘பொன்’ பொங்கல் கொண்டாட்டம்

4 months ago 14

சென்னை: ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் தற்போது பண்டிகை காலத்திற்கான சிறப்பு சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் ‘பொன் பொங்கல்’ என்ற பெயரிலும், ஆந்திர பிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் ‘சுவர்ண சங்க்ராந்தி’ என்ற பெயரிலும் கொண்டாடப்படும் இந்த புதிய பிரசாரம், அறுவடை திருநாளுக்கு ஒரு மரியாதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்க நகைகளுக்கான சேதாரத்தின் (VA) மீது 20% குறைவு, வைரம் மற்றும் அன்கட் வைரங்களின் மதிப்பில் (சாலிடேர்களை தவிர) 25% வரை குறைவு, வெள்ளிப் பொருட்களின் சேதாரத்தின் (VA) மீது 25% குறைவு, வெள்ளி நகைகளின் எம்ஆர்பி மீது 10% குறைவு என பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.

இதுகுறித்து ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவன இயக்குனர் ஜி.ஆர்.ஆனந்த் (எ) அனந்தபத்மநாபன் கூறுகையில், ‘‘விவசாயம் நமது பாரம்பரியத்தின் ஆணிவேர், அதே உணர்வோடு பார்த்தால், பண்டிகைகளின் போது புதிய நகைகளை வாங்குவது நம்மை வரையறுக்கும் ஒரு நேசத்துக்குரிய பாரம்பரியமாகும். இதை கருத்தில் கொண்டு, இந்த பருவத்தை ‘ஆபரண அறுவடை’யாக கொண்டாடுவதற்காக இந்த பிரசாரத்தை நாங்கள் உருவாக்கி உள்ளோம். எங்கள் 60 ஆண்டுகளின் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் வகையில், எங்களின் இந்த ‘பொன் பொங்கல்’ மற்றும் ‘சுவர்ண சங்க்ராந்தி’ சலுகைகள் உங்கள் பண்டிகைகளுக்கு ஆழமான நேர்த்தியையும், பாரம்பரியத்தையும் சேர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளன,’’ என்றார்.

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘நாங்கள் எங்கள் புதிய பிரசாரத்தின் சலுகைகளை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். கைவினைத்திறனை பிரதிபலிக்கும் சமீபத்திய வடிவமைப்புகளின் விரிவான கலெக்ஷன்களை வழங்குகிறோம். பாரம்பரியத்தையும், நிகழ்கால கலைத்திறமையையும் எளிதாக இணைக்கும் திறனுக்காக அறியப்பட்ட ஜிஆர்டி, அதன் ஈடில்லா தரமும் பல்வேறு வகைகளுக்காக தலைமுறை தலைமுறையாக குடும்பங்களால் தொடர்ந்து போற்றப்படுகிறது. அனைவருக்கும் 2025ம் ஆண்டு அற்புதமான தொடக்கமாகவும், இந்த பண்டிகைக் காலம் மறக்கமுடியாததாகவும் அமைய வாழ்த்துகிறோம்,’’ என்றார்.

The post ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் சார்பில் ‘பொன்’ பொங்கல் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article