ஜாமீன் வழங்கிய 7 நாட்களில் கைதிகள் வெளிவருவதை உறுதிசெய்க: ஐகோர்ட் உத்தரவு

2 months ago 11

சென்னை: ஜாமீன் வழங்கிய 7 நாட்களில் கைதிகள் சிறையில் இருந்து வெளிவருவதை உறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாமாக முன்வந்து எடுத்த வழக்கில் சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிணைத்தொகை செலுத்த முடியாமல் சிறைகளில் இருப்பதாக வெளியான செய்தியின்படி விசாரணை நடத்தப்படுகிறது. 153 விசாரணைக் கைதிகள், 22 தண்டனைக் கைதிகள் வெளிவர இயலவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு உதவித் திட்டம் மூலம் பயனடைந்த கைதிகளின் விவரங்களை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post ஜாமீன் வழங்கிய 7 நாட்களில் கைதிகள் வெளிவருவதை உறுதிசெய்க: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article