
டோக்கியோ,
ஜப்பானின் அய்ச்சி மாகாணம் நகோயா நகரில் தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அங்குள்ள பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் சக ஆசிரியர்களுடனான சமூகவலைதள குழுவில் சிறுமிகளின் ஆபாச படங்களை பகிர்ந்துள்ளனர்.
இந்த புகைப்படங்கள் மற்ற சமூகவலைதளங்களிலும் காட்டுத்தீயாக பரவியது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் நகோயா மற்றும் யோகாகாமா பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் இந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்தது உறுதியானது.
இதையடுத்து போலீசார் ஆசிரியர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வேலியே பயிரை மேய்ந்தது போல அமைந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.