ஜனவரி 2ம் பாதி மாதத்துக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.7 குறைவு: தொழிற்துறையினர் மகிழ்ச்சி

2 weeks ago 4

திருப்பூர்: ஜனவரி 2ம் பாதி மாதத்துக்கான நூல் விலை அனைத்து ரகங்களுக்கு கிலோவுக்கு ரூ.7 குறைந்துள்ளது. அனைத்து ரகங்களின் நூல் விலையும் ரூ.7 குறைந்துள்ளதால் தொழிற்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 6 மாத காலமாக விலையை எந்தவித ஏற்றமும் இறக்கமும் இல்லாத சூழலில் தற்பொழுது ரூ‌.7 விலை குறைந்து இருப்பது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.

பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள். இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பிவைக்கப்படும்.

நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில் துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது.

இதனிடையே கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை தொடர்ந்து, நவம்பர் மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் செப்4 அன்று அறிவித்தது. அதன்படி அனைத்து ரக நூல்களுக்கும் கிலோவுக்கு ரூ. 10 குறைந்தது. கடந்த 6 மாத காலமாக விலையை எந்தவித ஏற்றமும் இறக்கமும் இல்லாத சூழலில் தற்பொழுது கிலோவுக்கு ரூ‌.7 விலை குறைந்து இருப்பது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.

The post ஜனவரி 2ம் பாதி மாதத்துக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.7 குறைவு: தொழிற்துறையினர் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article