“ஜனநாயக முறையில் செயல்படும் ஒரே கட்சி அதிமுக” - முன்னாள் அமைச்சர் பெருமிதம்

1 hour ago 2

செங்கல்பட்டு: “ஜனநாயக முறையில் செயல்படும் ஒரே கட்சி அதிமுக” என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான முக்கூர் என்.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அஞ்சூர் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான முக்கூர் என்.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்: அப்போது முக்கூர் என்.சுப்பிரமணியன் பேசியது: “திமுக அரசு அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு சிலருக்கு தந்தவர்கள் பெரும்பான்மையான பெண்களை வஞ்சித்துள்ளனர்.

Read Entire Article