தேவையானவை:
சோளம், அவல் – தலா அரை கப்
கேழ்வரகு – அரை கப்
உளுந்து மாவு – 4 தேக்கரண்டி
புளித்த பசுந்தயிர் – இரண்டு கப்
பச்சைமிளகாய் – 1
வெங்காயம் – சிறிது
உப்பு, சீரகம் – தேவைக்கேற்ப
செக்கு நல்லெண்ணெய் – சிறிது
செய்முறை:
சோளம், கேழ்வரகு அவலை சுத்தம் செய்து வறுத்து கொரகொரப்பாக அரைக்கவும். சிறிது நல்லெண்ணெய் காயவைத்து சிரகம், ப.மிளகாய், வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். பின் உளுந்துமாவை சிறிது சூட்டில் வறுத்து பொடித்த கேழ்வரகு, சோள அவலை சேர்த்து அடுப்பை அணைக்கவும். இந்த கலவை ஆறியதும் கடைந்த தயிர், உப்பு, வறுத்த வெங்காய கலவையை சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். அரைமணி நேரத்திற்குப்பின் இட்லித்தட்டில் சிறிது எண்ணெய் தடவி, ஊறிய கேழ்வரகு, சோள அவல் கலவையை ஊற்றி பின் பத்து நிமிடம் வேக வைக்கவும். சூடான சத்தான சோளம் கேழ்வரகு அவல் இட்லி தயார்.
The post சோளம் கேழ்வரகு அவல் இட்லி appeared first on Dinakaran.