
சேலம்
கோடை விடுமுறையையொட்டி, ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் ெரயில்வே நிர்வாகம் சிறப்பு ெரயில்களை இயக்க முடிவு செய்து உள்ளது. அந்த வகையில் மும்பை-கன்னியாகுமரி இடையே கோடைகால சிறப்பு ரெயில் திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி மும்பை சி.எஸ்.எம்.டி.-கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-01005) வருகிற 9-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை புதன்கிழமைகளில் மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர் வழியாக வியாழக்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 4.15 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக மதியம் 1.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி-மும்பை சி.எஸ்.எம்.டி. வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-01006) வருகிற 10-ந் தேதி முதல் அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், கரூர், நாமக்கல் வழியாக நள்ளிரவு 1 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 1.05 மணிக்கு புறப்பட்டு திருப்பத்தூர், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக சனிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மும்பை சி.எஸ்.எம்.டி. சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.