சேலம் அருகே அதிகாலையில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற தொழிலாளி கைது

5 months ago 15

சேலம், நவ. 26: சேலம் தீவட்டிப்பட்டி அடுத்த பொம்மியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரோஜா (65), கூலி தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை காட்டு பகுதிக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான கோவிந்தன், என்பவர் அங்கு வந்துள்ளார். அவர் திடீரென சரோஜா எதிர்பார்க்காத நேரத்தில் அவர் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறிக்க முயன்றார். அப்போது சரோஜா சத்தம் போட்டதால், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்ற கோவிந்தனை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் இதுபற்றி தீவட்டிப்பட்டி போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் கோவிந்தனை கைது செய்த காவல் நிலையம் அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post சேலம் அருகே அதிகாலையில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Read Entire Article