சேலத்தில் மேலும் ஒரு நாதக நிர்வாகி விலகல்

2 months ago 12

சேலம்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை, யாருடைய கருத்தையும் கேட்பதில்லை, நான் சொல்றதை கேட்காவிட்டால் வெளியே போ என்று கூறி வருகிறார் என குற்றம் சாட்டி அவர் மீதுள்ள அதிருப்தியில் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை நேற்று முன்தினம் அக்கட்சியை விட்டு விலகுவதாக முகநூல் பக்கத்தில் அறிவித்தார். இதைதொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம் நேற்று கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

The post சேலத்தில் மேலும் ஒரு நாதக நிர்வாகி விலகல் appeared first on Dinakaran.

Read Entire Article