சென்னை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பாகுபாடு காட்டிய அறநிலையத் துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் எம்எல்ஏ என்ற முறையில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்றார். அப்போது குடமுழுக்கு நடத்தப்பட்ட தளத்துக்கு செல்ல செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.