செல்போனை பரிசாக கொடுத்து பாலியல் தொல்லை: பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

1 month ago 8

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஆதிவராகநல்லூரை சேர்ந்தவர் ராஜாமணி மகன் ராமன்(வயது 28). இவர், ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், அதே பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்த ஒரு மாணவிக்கு செல்போன் உள்ளிட்ட பொருட்களை பரிசாக வாங்கி கொடுத்துள்ளார். சம்பவத்தன்று அந்த மாணவியை தனியாக அழைத்து சென்று ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் மனமுடைந்த மாணவி வீட்டில் இருந்த டீசலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்தனர்.

Read Entire Article