டி.என்.பி.எல்.: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி அணிகள் இன்று மோதல்

4 hours ago 2

நெல்லை,

8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்திலும் நடந்து முடிந்தன. இதனையடுத்து இந்த தொடரின் 3வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லையில் இன்று தொடங்குகிறது.

இதில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது. அதன்படி இரவு 7.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழர்கள் அணிகள் மோதுகின்றன.

திருச்சி அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்யவும், சேப்பாக் அணி 6வது வெற்றியை பதிவு செய்யவும் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Read Entire Article