செம்மண் கடத்தல் விவகாரம்: கோவை ஆட்சியருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

6 months ago 31

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படவில்லை என்பதை கோவை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டுமென உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மதுக்கரை, ஆலந்துரை, வெள்ளிமலை உள்ளிட்ட கிராமங்களில், சட்டவிரோதமாக செம்மண் திருடப்படுவது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் சட்டவிரோதமாக செம்மண் வெட்டி கடத்தப்படுவதை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கால் மூலமாக நீதிபதிகளிடம் நேரடியாக காண்பித்தார்.

Read Entire Article