செம்பனார்கோயில் அருகே மரம் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்

5 months ago 15

 

செம்பனார்கோயில், நவ.25: செம்பனார்கோயில் அருகே மரம் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. தமிழ்நாடு வனத்துறையின் மூலம் நாகப்பட்டினம் வனவியல் விரிவாக்க மையம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கான மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம், செம்பனார்கோயில் அருகே திருச்சம்பள்ளி வனசரக அலுவலகத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு வனவியல் விரிவாக்க அலுவலர் சாந்தவர்மன் தலைமை தாங்கினார். வனச்சரக அலுவலர் குமரவேல் முன்னிலை வகித்தார். பயிற்சியில் பேராசிரியர் அனிதா, காணொலி காட்சி மூலமும், கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க பொருளாளர் கண்ணன் ஆகியோர் விவசாயிகளுக்கு எப்படி லாபகரமாக மரம் வளர்ப்பது மற்றும் அரசின் திட்டங்கள், மானியங்கள் குறித்தும் பயிற்சி அளித்தனர். முகாமில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post செம்பனார்கோயில் அருகே மரம் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article