சென்னையில் தொடர் மழை: சாலைகளில் தேங்கிய நீரால் போக்குவரத்து பாதிப்பு

3 months ago 17

சென்னை: சென்னையில் பெய்த மழை காரணமாக சாலையோரம் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக அன்றைய தினம் முதலே சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது.

அதன்படி, மீனம்பாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், ஐஸ் ஹவுஸ், நந்தனம், கிண்டி, மாமல்லபுரம், தேனாம்பேட்டை, சோழிங்கநல்லூர், கொளப்பாக்கம், மேற்கு தாம்பரம், எம்ஜிஆர் நகர், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் மழை பெய்தது. இதைத் தொடர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக நேற்று காலை சுமார் 10 மணியளவில் தொடங்கிய மழை, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பிற்பகல் வரை பரவலாக பெய்தது.

Read Entire Article