சென்னை : சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் ரூ.48 கோடி மதிப்புள்ள திட்டத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. நீலாங்கரை, திருவான்மியூர், அடையாறு, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குழாய்களை பதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இறக்குமதி செலவை குறைக்கவும் குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
The post சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி!! appeared first on Dinakaran.