சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னை விமான நிலைய பகுதியில் நேற்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது.
இதனால், லண்டனிலிருந்து 317 பயணிகளுடன் சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், மஸ்கட்டிலிருந்து 252 பயணிகளுடன் வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை பெங்களூருவுக்கும் மற்றும் ஐதராபாத்திலிருந்து 162 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், புனேவிலிருந்து 152 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை திருவனந்தபுரத்துக்கும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.