சென்னை : சென்னை மெட்ரோ உதவி எண்கள் தொழில்நுட்ப கோளாறு சரியானது. இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மெட்ரோ உதவி எண்கள் வேலை செய்யவில்லை. மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏதேனும் புகார்கள் இருந்தால், [email protected] என்ற முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளவும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது.
சென்னை மெட்ரோ என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான திட்டமாகும். இத்திட்டத்தின்படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்புவழிகளில் தனியே இயக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் இருப்பு வழிகளின் தண்டவாளங்கள், மேம்பாலங்கள் அல்லது நிலத்தடியில் சுரங்கம் தோண்டி அமைக்கப்பட்டுள்ளன.
மேல்வாரியாக, இத்திட்டம் “சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தை” ஒத்திருந்தாலும், இத்திட்டத்தின்படி இயங்கும் தொடருந்துகள் தில்லி மெற்றோ திட்டத்தை ஒத்திருக்கும். இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் நீல வழித்தடம், பச்சை வழித்தடம் என இரு வழித்தடங்களில் சேவையினை வழங்குகின்றன
இந்நிலையில் மெட்ரோ ரயில் உதவி எண்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, CMRL ஹெல்ப்லைன் எண்கள் தற்காலிகமாக வேலை செய்யவில்லை. சீரமைப்பு பணி நடந்து வருகிறது என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏதேனும் புகார்களுக்கு, [email protected] இல் எங்களைத் தொடர்பு கொள்ளவும். உடனடி உதவிக்கு, அருகில் உள்ள நிலையக் கட்டுப்பாட்டாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது. CMRL ஹெல்ப்லைன் எண்கள் இப்போது வேலை செய்கின்றன. ஏதேனும் புகார்களுக்கு, CMRL ஹெல்ப்லைனில் எங்களைத் தொடர்பு கொள்ளவும் – 1860 425 1515, பெண்கள் உதவி எண் – 155370 ஆகிய எங்களை தொடர்பு கொள்ளலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
The post சென்னை மெட்ரோ ரயில் உதவி எண்கள் மீண்டும் செயல்பட தொடங்கின! appeared first on Dinakaran.