சென்னை, புறநகர் கடைவீதிகளில் குவிந்த மக்கள்: ஜவுளி, கரும்பு, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அமோகம்

3 weeks ago 5

சென்னை: பொங்கல் விழா நாளை (ஜன.14-ம் தேதி) கொண்டாடப்பட இருக்கும் நிலையில், விடுமுறை நாளான நேற்று, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

வட சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை எம்சி சாலையில் உள்ள துணிக் கடைகளில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து, அவர்களின் விருப்பத்தை கேட்டு புத்தாடைகளை வாங்கிச் சென்றனர். வடசென்னையை ஒட்டிய திருவள்ளூர் மாவட்ட கிராமப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் மக்கள் வந்திருந்தனர். அப்பகுதியில் உள்ள சாலைகள் முழுவதும் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது.

Read Entire Article