சென்னை: சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் கோர மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகப் பகுதியில் 207 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 982 குடியிருப்புகள் கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகளில் வசிப்போர் முறையாக பராமரிப்பு கட்டணங்களை செலுத்துவதில்லை. தங்கள் பகுதிகளையும் தூய்மையாக பராமரிப்பதில்லை.குடியிப்பு வாசிகள் ஒன்றிணைந்து செயல்படுவதில்லை என்பதால் அரசு அறிவுறுத்தியவாறு குடியிருப்போர் நலச் சங்கங்களை அமைத்து, அப்பகுதியில் நிலவும் பிரச்சினைகள், சிறு, சிறு பராமரிப்பு பணிகளைக்கூட மேற்கொள்வதில்லை.