
தமிழகத்தின் மிகவும் முக்கிய, பரபரப்பான ரெயில் நிலையங்களில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையமும் ஒன்று. தினமும் இங்கு லட்சக்கணக்கான மக்கள் ரெயில் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பார்சல் அலுவலகத்திற்கு வந்த இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரெயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.