
ஐதராபாத்,
இந்த ஆண்டுக்கான 'மிஸ் வோர்ல்ட்' உலக அழகிப் போட்டி இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 140 நாடுகளைச் சேர்ந்த அழகிகளும், உலகெங்கிலும் இருந்து பத்திரிகையாளர்கள் மற்றும் பிற பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர்.
இதன் பிரமாண்டமான இறுதிப் போட்டி மே 31 அன்று ஹைடெக்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாகப் பல நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.