சென்னை: சாலையில் மயங்கி விழுந்த சிறுவனை பார்த்த சுகாதார துறை அமைச்சர், அந்த சிறுவனை உடனடியாக மீட்டு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தார்.
சென்னை சைதாப்பேட்டை சிஐடி நகரை சேர்ந்த தியாகராஜன் - கலைவாணி தம்பதியின் 5 வயது சிறுவன் விஷ்ரூத், நேற்று காலை 8:40 மணியளவில் வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். அப்போது, நடைபயிற்சி முடித்துவிட்டு அவ்வழியாக வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதைப் பார்த்தார்.