சென்னை: சென்னை கானாத்தூரில் இரவு நேரத்தில் பெண்கள் சென்ற காரை மற்றொரு காரில் சென்ற இளைஞர்கள் வழிமறித்து அச்சுறுத்தியுள்ளனர். முட்டுக்காடு பாலம் அருகே சாலையின் நடுவில் காரை நிறுத்தி பெண்கள் சென்ற காரை இளைஞர் ஒருவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீடு வரை பின்தொடர்ந்து வந்து இளைஞர்கள் காரை குறுக்கே நிறுத்தி தாக்குதல் நடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வீடியோ பதிவுகளை கைப்பற்றி கானத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post சென்னை கானாத்தூரில் பெண்கள் சென்ற காரை வழிமறித்து இளைஞர்கள் அச்சுறுத்தல் appeared first on Dinakaran.