தைப்பூசம்: சொந்த கிராம முருகன் கோயிலில் குடும்பத்துடன் இபிஎஸ் சாமி தரிசனம்!

3 hours ago 1

மேட்டூர்: தைப்பூசத் திருவிழாவை ஒட்டி சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையத்தில் உள்ள முருகன் கோவிலில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

தைப்பூச திருவிழாவை ஒட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி தனது சொந்த ஊரான எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் உள்ள பழனி ஆண்டவர் திருக்கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு செய்தார்.

Read Entire Article