பெசன்ட் நகர் கடற்கரையில் மாநகராட்சி சார்பில் .ரூ.1.61 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்

3 hours ago 1

சென்னை: சென்னை மாநகராட்சி மூலம் ரூ.1.61 கோடி மதிப்பில் பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை துணை முதலமைச்சர் உதயநிதி திறந்துவைத்தார். இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்கள், மாற்றுத்திறனாளி சகோதர – சகோதரிகளின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களின் வாழ்க்கைச் சூழலையும் மேம்படுத்தி வருகின்றன.

குறிப்பாக, 2021-இல் கழக அரசு அமைந்த ஓரிரு மாதங்களிலேயே, மாற்றுத்திறனாளிகள், மெரினா கடற்கரைக்குச் சென்று கடல் அலையில் கால் நனைக்கும் வண்ணம், பிரத்யேக நடைபாதை அமைக்கப்பட்டது.

இதற்கு கிடைத்த பாராட்டையும், வரவேற்பையும் மனதிற்கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையிலும், மாற்றுத்திறனாளிகள் கடல் வரை சென்று வரும் வண்ணம் சிறப்பு நடைபாதையை அமைத்திட உத்தரவிட்டார்கள்.

அதன்பேரில், சென்னை மாநகராட்சி மூலம், ரூ.1.61 கோடி மதிப்பில் பெசன்ட் நகர் கடற்கரையில், அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை இன்று திறந்து வைத்தோம்.

மரப்பாதையின் வழியே கடல் அருகே சென்று அலையை ரசித்த மாற்றுத்திறனாளிகளின் மகிழ்ச்சியில் நாமும் மகிழ்ந்தோம். அவர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்” என தெரிவித்துள்ளார்.

The post பெசன்ட் நகர் கடற்கரையில் மாநகராட்சி சார்பில் .ரூ.1.61 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் appeared first on Dinakaran.

Read Entire Article