
சென்னை,
சென்னை எண்ணூரில் அரசு பேருந்தின் கண்ணாடி கழன்று விழும் நிலையில் இருந்ததால் ஆபத்தான முறையில் பொதுமக்கள் பயணம் செய்தனர். எண்ணூரில் இருந்து பிராட்வே வரை செல்லும் தடம் எண் 4 மாநகரப் பேருந்தின் பின்பக்க கண்ணாடி கழன்று தொங்கியபடி இருந்தது.
அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் தொங்கிய கதவை கையில் பிடித்து ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்தனர். எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி, பேருந்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்