இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி: பி.வி. சிந்து தோல்வி

19 hours ago 5

ஜகர்த்தா,

2025-ம் ஆண்டுக்கான இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் இந்தோனேசியாவில் நடந்து வருகின்றன. இதில், ஒற்றையர் மகளிர் போட்டியில், இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து, காலிறுதிக்கு முந்தின சுற்றில் தாய்லாந்து நாட்டின் போர்ன்பாவீ சோச்சுவாங் என்பவரை எதிர்த்து விளையாடினார்.

2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான சிந்துவை, 22-20, 10-21, 18-21 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சோச்சுவாங் வெற்றி பெற்றார். இந்த போட்டி 1 மணிநேரம் 18 நிமிடங்கள் வரை நீடித்தது.

போட்டியின் முதல் செட்டை கைப்பற்றுவதில் தோல்வியடைந்தபோதும், 2-ம் செட்டை சிந்து கைப்பற்றினார். இதனால், வெற்றியை முடிவு செய்யும் 3-வது செட்டுக்கான போட்டி விறுவிறுப்பாக நடந்தது. எனினும், அந்த செட்டிலும் சிந்து வெற்றி பெறவில்லை.

இதனால், இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடரில் இருந்து சிந்து வெளியேறினார். ஒற்றையர் போட்டியில் பதக்கம் பெறும் இந்தியாவின் கனவும் முடிவுக்கு வந்துள்ளது.

Read Entire Article