
சென்னை,
வருகிற 29ம் தேதி முதல் சென்னை ஆர்பிஐ சுரங்கப்பாதை இனி ஒரு வழிபாதை மாற்றப்பட உள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. கடற்கரை சாலையில் இருந்து பாரிமுனை செல்வோருக்கு எந்தவித மாற்றம் இல்லை.
மறுமுனையில் வருவோர் சுரங்கப்பாதை அணுகு சாலை - வடக்கு கோட்டை சாலை - முத்துசாமி சாலை - போர் நினைவுச் சின்னம் வழியாக செல்ல வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.