சென்னை அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா

16 hours ago 4

கொல்கத்தா,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 56 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் செய்தது.

தொடக்கத்தில் ரஹ்மதுல்லா குர்பாஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தார் . மறுபுறம் அதிரடி காட்டிய சுனில் நரேன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார் . தொடர்ந்து வந்த ரஹானே சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் 48 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் ரசல் 38 ரன்களும், மனிஷ் பாண்டே 36 ரன்களும் எடுத்தனர் . இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 179 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் நூர் அகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Read Entire Article