செஞ்சி தேர்வு மையத்தில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இல்லை: தேர்வுத்துறை அறிக்கை சமர்ப்பிப்பு

2 hours ago 1

விழுப்புரம்: செஞ்சி தேர்வு மையத்தில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 8ம்தேதி வெளியிடப்பட்டது. இதில் செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 167 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதேபோல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 பேரும், அங்குள்ள அல்ஹிலால் தனியார் பள்ளியில் 35 பேர், அனந்தபுரம் அரசு பள்ளியில் 11 பேர், அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 14 பேர், சத்தியமங்கலம் அரசு பள்ளியில் 7 பேர் என செஞ்சி ஒன்றியத்தில் மட்டும் 251 பேர் வேதியியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர்.

ஒரே மையத்தில் தேர்வு எழுதிய அதிக மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றதால் காப்பி அடித்திருக்கலாம் என சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சையை அடுத்து தேர்வுத்துறை விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அந்த தேர்வு மையத்தில் தேர்வுத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். மாணவர்கள் மிகவும் திறம்பட விடைத்தாளை எழுதி உள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், செஞ்சி தேர்வு மையத்தில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்று முதற்கட்ட விசாரணை அறிக்கையை தேர்வுத்துறை இயக்குநரிடம் அதிகாரிகள் சமர்ப்பித்தனர். அதில், மாணவர்களின் விடைத்தாள்களை ஆய்வு செய்ததில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.

The post செஞ்சி தேர்வு மையத்தில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இல்லை: தேர்வுத்துறை அறிக்கை சமர்ப்பிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article