“செங்கோட்டையன் கருத்தால் அதிமுகவில் சலசலப்பு எதுமில்லை, ஏனெனில்...” - செல்லூர் ராஜூ

1 week ago 5

மதுரை: “முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவையும், பொதுச் செயலாளர் கே.பழனிசாமியையும் குறை சொல்லவில்லை. அப்புறம் எதற்கு அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கோபமாக கூறியுள்ளார்.

இதுகுறித்து மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமிக்கு ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படம் இல்லாதது குறித்து அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகளிடம்தான் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் அதிமுகவையும், பொதுச் செயலாளர் கே.பழனிசாமியையும் குறை சொல்லவில்லை. நிகழ்ச்சி நடத்தியது அதிமுக இல்லை. விவசாயிகள் சங்கம்.

Read Entire Article