செங்கல்பட்டில் தசரா விழா இன்று தொடக்கம்: பாதுகாப்பு கேள்விக்குறி? 

7 months ago 44

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ஆண்டுதோறும், நவராத்திரியை ஒட்டி, 10 நாட்கள் தசரா விழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி இன்று (அக்.3) தொடங்கும் தசரா விழாவில் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. சார் ஆட்சியர் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிட்டும் அதிகாரிகள், விழா குழுவினர் அதைப் பொருட்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

100 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கல்பட்டில் நடைபெற்று வரும் பிரசித்திபெற்ற தசரா விழா இன்று (அக்.3) இரவு தொடங்குகிறது. இதை முன்னிட்டு, சின்னக்கடை, பூக்கடை, ஜவுளிக்கடை, சின்னம்மன் கோயில், சின்னநத்தம், ஓசூரம்மன் கோயில், முத்துமாரியம்ன் கோயில், மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் அம்மன் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்படும்.

Read Entire Article