செகந்திராபாத் எக்ஸ்பிரசின் 3 பெட்டிகள் தடம் புரண்டன

2 months ago 10

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் செகந்திராபாத்-ஷாலிமர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. ஹவுரா அருகே நல்பூரில் அதிகாலை 5.30மணியளவில் ரயில் வந்தபோது அதன் 3 பெட்டிகள் தடம் புரண்டன. 3வது ஏசி எகானமி, 3வது எகானமி மற்றும் ரயிலின் பார்சல் வேனும் தடம் புரண்டன.

இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே மீட்பு மற்றும் மருத்துவ நிவாரணகுழு ரயில்கள் தடம் புரண்ட இடத்திற்கு விரைந்தன. மேலும் பயணிகளை அவரவர் இடங்களுக்கு அழைத்து செல்வதற்கு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் உள்ளூர் ரயில்கள் மற்றும் சில ரயில்கள் இயக்கம் பாதிக்கப்பட்டது.

The post செகந்திராபாத் எக்ஸ்பிரசின் 3 பெட்டிகள் தடம் புரண்டன appeared first on Dinakaran.

Read Entire Article