சூரியன் நகரில் தாழ்வான பகுதியில் திறந்து கிடக்கும் மின் பெட்டிகளால் அபாயம்

3 months ago 8

 

திருப்பூர், நவ.29: திருப்பூர் சூரியன் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதிகள் மின் விளக்குகளுக்கான மின்பெட்டி மின் கம்பத்தின் கீழ் பகுதியில் தாழ்வான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. கீழ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மின் பெட்டியின் கதவுகள் சேதம் அடைந்து திறந்த நிலையிலே உள்ளது. இதில் உள்ள ஒயர்கள் ஆபத்தான முறையில் வெளியே தெரியும்படி உள்ளது.

பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் இந்த வழியாக செல்வதும், மாலை நேரத்தில் சாலைகளில் விளையாடுவதுமாக உள்ள நிலையில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் இதனை தொடும் பட்சத்தில் விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு மின் பெட்டிகளின் கதவுகளை சீரமைப்பதோடு சிறுவர்களின் கையில் எட்டாத வகையில் சற்று உயரத்தில் மின் பெட்டிகளை பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post சூரியன் நகரில் தாழ்வான பகுதியில் திறந்து கிடக்கும் மின் பெட்டிகளால் அபாயம் appeared first on Dinakaran.

Read Entire Article