சூதாடிய 3பேர் கைது

2 months ago 12

இடைப்பாடி, டிச.10: இடைப்பாடி அருகே வேம்பனேரியில் பணம் வைத்து சூதாடுவதாக, இடைப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு எஸ்ஐ ஸ்ரீராம் மற்றும் போலீசார் சென்றனர். அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சேட்டு(எ) ஆனந்தன்(51), சுந்தர்ராஜன் (35), சித்தூர் மூக்கரையானூர் பகுதியை சேர்ந்த அழகு(48) ஆகிய 3பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், 3பேரையும் சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

The post சூதாடிய 3பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article