சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த புதுச்சேரி 

3 months ago 12

புதுச்சேரி: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் காரணமாக புதுச்சேரி நகரப்பகுதி ஸ்தம்பித்தது. பல மணி நேரம் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் 30-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை 5 நாட்களும், பிற மாநிலங்களான தமிழகம் உள்ளிட்டவைகளில் தீபாவளி தினமான 31-ம் தேதி முதல் 3-ம் தேதி வரையும் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக புதுச்சேரிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதனால் கடற்கரை சாலை, பாரதி பூங்கா, பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

Read Entire Article