சென்னை: மருத்துவம் பயிலும் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கான கல்வி கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கல்வி கட்டண நிர்ணயக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு கடந்த 2022-23, 2023-24 மற்றும் 2024-25 கல்வி ஆண்டுகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து கல்வி கட்டணக் குழு கடந்த 2022 அக்டோபரில் உத்தரவிட்டிருந்தது.