சீர்காழி, மே 8: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி கிராம கணக்குகள் முடித்தல் கூட்டம் நடைபெறுகிறது. சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஜமாபந்தியில் 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஜமாபந்தியில் சீர்காழி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி appeared first on Dinakaran.