சீமான் மீது அதிருப்தி மேட்டூர் நாதக நிர்வாகி 40 பேருடன் விலகல்

2 months ago 11

சேலம்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான அதிருப்தியில் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 18ம் தேதி சேலம் மாநகர் மாவட்டசெயலாளர் தங்கதுரை, நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம் ஆகியோர் அக்கட்சியை விட்டு விலகினர். இந்நிலையில் நேற்று மூன்றாவதாக ஒரு பொறுப்பாளர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளார். மேட்டூர் நகர துணை தலைவரான ஜீவானந்தம் (எ) ராஜா, கட்சியில் இருந்து விலகுவதாக முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார். நாதகவில் இருந்து விலகிய விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் குமார், மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்பி முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தனர்.

The post சீமான் மீது அதிருப்தி மேட்டூர் நாதக நிர்வாகி 40 பேருடன் விலகல் appeared first on Dinakaran.

Read Entire Article