பீஜிங்:தெற்கு சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள யுவான்சுய் ஆற்றில் மிகப்பெரிய கப்பல் ஒன்று ஆற்றில் எண்ணெய் கசிவை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது கப்பலின் பின்புறமாக வந்து கொண்டிருந்த படகு ஒன்று கப்பல் மீது மோதியது. இதில் கப்பல் மற்றும் படகில் இருந்த 19 பேர் ஆற்றில் விழுந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர், ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த 3 பேரை பத்திரமாக மீட்டனர். ஆயினும் இந்த விபத்தில் 11 பேர் பலியாகி விட்டனர்.
The post சீனாவில் கப்பல் மீது படகு மோதி 11 பேர் பலி appeared first on Dinakaran.