பீஜிங்: சீனாவின் லியோயாங் நகரில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று பிற்பகல் ஏராளமானோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு தப்ப முயன்றனர். இந்த விபத்தில் 22 பேர் உடல் கருகி பலியாகினர். படுகாயமடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
The post சீன உணவக தீ விபத்தில் 22 பேர் பலி appeared first on Dinakaran.