விருதுநகர்: சிவகாசி நெடுங்குளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரபல தனியார் நிறுவன பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளர்கள் பலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு துறையினர் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
The post சிவகாசி நெடுங்குளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.