சிவகங்கை அருகே அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை: இபிஎஸ் கண்டனம்

2 months ago 12

சென்னை: “ஸ்டாலினின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக சிவகங்கை மாவட்டம் அல்ல, தமிழகம் முழுவதும் கடந்த 41 மாத காலத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம், சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை அனுபவிக்கும் பாலியல் தொல்லைகள், போதைப் பொருள் புழக்கம் போன்ற கொடூரச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதை முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம், மாத்தூர் ஊராட்சி, அதிமுக நாட்டாக்குடி கிளைச் செயலாளர் ஆர். கணேசன் இன்று (நவ.4) கலை 5 மணியளவில் வழக்கம்போல் தனது பெட்டிக் கடையை திறக்கச் சென்றபோது, அவரை மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். நாட்டாக்குடி கிராமத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கோயில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்ட நிலையில், காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படுகொலையை தடுத்திருக்கலாம்.

மேலும், தீபாவளித் திருநாளன்று மாலை 4 மணியளவில் சிவகங்கை, வாணியங்குடியில் உள்ள நாடக மேடையில் மணிகண்டன், அருண்குமார் மற்றும் ஆதிராஜா ஆகியோர் பேசிக்கொண்டிருந்தபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் அந்த மூவரையும் வெட்டியதாகவும், இதில் மணிகண்டன் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இறந்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Entire Article